Wednesday, 26 November 2014

youth arrested for kidnapping sodomising and killing Minor boy

8 வயது சிறுவனை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, கொன்றவன் கைது

லக்னோ, நவ.26-

உத்தரப்பிரதேசம் மாநிலம், பஹ்ராய்ச் மாவட்டத்தை சேர்ந்த கொத்வாலி டெஹத் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன், பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில் கடந்த 22-ம் தேதி கடத்தப்பட்டான்.

அவனை கடத்திய மர்ம நபர், சிறுவனின் பெற்றோர் செல்போனை தொடர்பு கொண்டு, ’உங்கள் மகனை விடுவிக்க வேண்டும் என்றால், நீங்கள் ஒரு லட்சம் ரூபாயை உடனடியாக தர வேண்டும்’ என்று தொடர்ந்து மிரட்டி வந்தான்.

இது தொடர்பாக, சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அவர்களின் செல்போனுக்கு அழைப்பு வந்த மறுமுனையை கண்காணித்த போலீசார், நான்கே என்ற 18 வயது நபரை நேற்று கைது செய்தனர்.

சிறுவன் எங்கே? என்று அவனிடம் போலீசார் விசாரித்தபோது, அவனை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விட்டதாக நான்கே தெரிவித்துள்ளான். இறந்த சிறுவனின் உடலை என்ன செய்தான்? என்பது தொடர்பாக அவனிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது.


Tuesday, 25 November 2014

Congress leader sacked for anti Rahul comment reinstated

ராகுலை கோமாளி என்று விமர்சித்ததால் நீக்கப்பட்ட முஸ்தபாவை மீண்டும் சேர்த்துக் கொண்டதாக காங். அறிவிப்பு

திருவனந்தபுரம், நவ.25-


கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள காங்கிரஸ் தலைமையகமான இந்திர பவனில் கடந்த மே மாதம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் சார்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. மத்திய அரசின் மக்கள் விரோத ஆட்சியும், ஊழல் பிரச்சினைகளும், விலைவாசி உயர்வும்தான் ஒட்டுமொத்த தோல்விக்கும் காரணம் என விவாதிக்கப்பட்டது.

இதற்கு சில தினங்களுக்கு முன்னதாக, கட்சியின் தோல்வி குறித்து கேரள மாநில காங்கிரசின் மூத்த தலைவர்கலில் ஒருவரான டி.எச்.முஸ்தபா பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ராகுல்காந்தியை “கோமாளி” என்று குறிப்பிட்டிருந்தார்.

முஸ்தபாவின் இந்தப் பேச்சு குறித்தும் இந்த நிர்வாக குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி ராகுல் காந்தியை அவதூறாக பேசிய முஸ்தபாவை தற்காலிக நீக்கம் செய்ய அந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கட்சியில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து பல முறை செய்தியாளர்களை சந்தித்த முஸ்தபா, ராகுல் காந்தியை கோமாளி என்று கூறிய எனது கருத்தை நான் எப்போதுமே வாபஸ் பெற்றுக் கொள்ள போவதில்லை என அழுத்தம், திருத்தமாக கூறியிருந்தார்.

இந்நிலையில், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தும், மன்னிப்பு கோரியும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமைக்கு முஸ்தபா கடிதம் எழுதி இருந்ததாகவும், அவரை மன்னித்து, மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளும்படி டெல்லி தலைமை அனுமதி அளித்ததையடுத்து, அவர் மீண்டும் காங்கிரசில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாகவும் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் வி.எம்.சுதீரன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Bomb threat in Ramanathapuram school proves hoax

வெடிகுண்டு மிரட்டலையடுத்து கீழக்கரையில் பள்ளிகள் மூடல்

ராமநாதபுரம், நவ.24-

ராமநாதபுரத்தில் உள்ள கீழக்கரை நகரசபை பெண் தலைவரான ரட்டியா துல் கத்தாரியா என்பவருக்கு இன்று காலை ஒரு மர்மக் கடிதம் வந்தது.

அவரது கணவர் அதை பிரித்து, படித்துப் பார்த்தபோது, கீழக்கரை பகுதிக்குட்பட்ட 5 பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், சரியாக இன்று காலை 11.18 மணிக்கு அந்த குண்டுகள் வெடித்துச் சிதறும் என்றும், முடிந்தால் அந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள் எனவும் எழுதப்பட்டிருந்தது.

இதனையடுத்து, கீழக்கரை பகுதிக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. போலீசாருக்கு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மோப்ப நாய்களுடன் விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் குழு அத்தனை பள்ளிகளையும் முழுமயாக சோதனை செய்தது.

இந்த சோதனைகளில் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படாததால், யாரோ சில விஷமிகள் வெடிகுண்டு புரளியை கிளப்பி விட்டிருக்கக் கூடும் என போலீசார் தெரிவித்தனர்.

Monday, 24 November 2014

Modi not to visit Janakpur during Nepal tour

Modi not to visit Janakpur during Nepal tour


New Delhi, Nov 23 (PTI) Prime Minister Narendra Modi will
only travel to Kathmandu when he will leave on Tuesday to
attend the SAARC summit in Nepal, despite his wish to visit
other parts of the country including Janakpur, the revered
Hindu religious site.
    "During his last visit to Kathmandu, Prime Minister Modi
had expressed a desire to visit other places in Nepal,
including Janakpur, Lumbini and Muktinath, to highlight, in
particular, the strong civilisational links and unparallelel
people-to-people contacts between our two countries. There has
been widespread interest in Prime Minister's schedule in the
upcoming visit to Nepal for the SAARC summit.
    "Due to Prime Minister's unavoidable domestic commitments
and pre-scheduled travels within the country, he will travel
only to Kathmandu to attend the SAARC Summit," External
Affairs Ministry Spokesperson Syed Akbaruddin said.
    He was responding to a query on Modi's visit and his
itinerary in Nepal.
    He also said the Prime Minister deeply values the special
relationship between India and Nepal and will always welcome
every occasion to visit Nepal and interact with the leadership
and the people of Nepal.
    "He looks forward to an early opportunity to visit
Janakpur, Lumbini, Muktinath and other places in Nepal," he
further added.
    Modi will be leaving India on November 25 to attend the
18th SAARC Summit in Kathmandu on November 26-27.
    He was scheduled to visit Janakpur, an ancient city said
to be the birthplace of Sita, situated 250 kms south of
Kathmandu.
    He was also keen to visit Lumbini, the birthplace of Lord
Buddha, and another sacred Hindu pilgrimage site, Muktinath,
located in the southern mountainous region.
    There were conflicting reports about his visit to
Janakpur after local political groups staged rallies and
counter-rallies in Janakpur in connection with the visit.
    The Unified CPN-Maoist and some Madhesi parties even
threatened to establish a parallel organising committee for
the visit.
    The controversy started after Nepal's Deputy Prime
Minister and Home Minister Bam Dev Gautam told Parliament that
there was no programme about Modi addressing the people of
Janakpur during his visit there. PTI PYK ZH AKJ

Friday, 21 November 2014

Pak army hands over Indian boy who crossed LoC inadvertently

Pak army hands over Indian boy who crossed LoC inadvertently
    Islamabad, Nov 19 (PTI) Pakistan army has handed over a
13-year-old boy to Indian authorities after he had
inadvertently crossed the Line of Control.
    Manzar Hussain, a student of class 8 and a resident of
Jhanagar village in Kashmir, had mistakenly crossed the LoC in
Asal Kass Nullah of Khui Ratta sector on November 14, the
Pakistan military said yesterday.
    He was handed over to Indian authorities at Chakoti-Uri
crossing point by military, it said. PTI SH ASK

Thursday, 20 November 2014

Largest Human Flag campaign to be held for Guinness in chennai

கின்னஸ் சாதனைக்காக சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் 50 ஆயிரம் பேருடன் மனித தேசியக் கொடி நிகழ்ச்சி

சென்னை, நவ.19-

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியாக சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் ’மனித தேசியக் கொடி’ உருவாக்கப்படவுள்ளது.

ரோட்டரி சங்கம் (மாவட்டம்-3230) சார்பில் வரும் டிசம்பர் 7-ம் தேதி நடத்தப்படவுள்ள இந்த உலக சாதனை நிகழ்ச்சியில், உலகின் மிக நீளமான மனிதக் கொடி வடிவில் இந்தியக் கொடியின் நிறத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான ரோட்டரி மாவட்ட கவர்னர் நாசர் கூறினார்.

புதிய கின்னஸ் சாதனையை படைக்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவ-மாணவியர், பிரபல தொழில் நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக இதுவரை சுமார் 28 ஆயிரம் பேர் தங்களது பெயர்களை முன்பதிவு செய்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Monday, 17 November 2014

தூங்க வேண்டும் என்று கூறி ஜி-20 மாநாட்டில் இருந்து வெளியேறிய புதின்

பிரிஸ்பேன், நவ 16–


தொழில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார ரீதியாக உலகின் மிகவும் வளர்ந்த நாடுகள் என்றழைக்கப்படும் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20 மாநாடு ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் நடந்து வருகின்றது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஜி 20 நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாடு நடக்கிறது. அதில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டார். மாநாட்டின் இடைவேளையின் போது புதினை அமெரிக்க அதிபர் ஒபாமா, கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

அப்போது இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் புதினிடம் உக்ரைன் விவகாரத்தில் ரஷியா தலையீட்டுக்கு கண்டனம் தெரிவித்தார். உக்ரைன் ஸ்திரதன்மையுடன் சுதந்திரமாக செயல்பட ரஷியா உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதை தவிர வேறு வழி இல்லை’’ இல்லாவிடில் ரஷியா மேலும் பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என மறைமுகமாக எச்சரித்தார்.

கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் கூறும் போது, உக்ரைனில் இருந்து ரஷியா ராணுவம் உடனே வெளியேற வேண்டும். அது ஒன்றையே தங்களிடம் தெரிவிக்கிறேன் என்றார். அதே கருத்தை அமெரிக்க அதிபர் ஓபாமாவும் கூறியதாக தெரிகிறது.

கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடை விதித்துள்ளது. இது போன்ற சூழ்நிலைகளால் ரஷிய அதிபர் புதின் கடும் எரிச்சல் அடைந்தார். எனவே, இன்று நடைபெறும் 2–வது நாள் மாநாட்டின் நிறைவு விழாவுக்கு இடையில் அவர் வெளியேறினார்.

பின்னர் மாநாட்டு அரங்கத்தில் இருந்து வெளியேறிய புதின், வாசலில் காத்திருந்த பத்திரிகையாளர்களிடம் தனது செயலுக்கான நியாயத்தை பதிவு செய்தார்.

‘நானும் என்னுடன் வந்த ரஷ்ய அதிகாரிகளும் இங்கிருந்து (பிரிஸ்பேன் நகரிலிருந்து) விளாடிவோல்ஸ்டாக்குக்கு விமானத்தில் செல்ல 9 மணி நேரமாகும். அடுத்து, அங்கிருந்து மாஸ்கோ நகரைச் சென்றடைய மேலும் 9 மணி நேரமாகும். மொத்தம் 18 மணி நேரம் விமானத்தில் பயணித்து, எனது வீட்டுக்கு செல்ல வேண்டும்.

பின்னர், வழக்கம் போல் மறுநாள் என் பணிகளை தொடர வேண்டும். எனவே, இந்த பயணத்துக்கு முன்னர் குறைந்தது நான்கைந்து மணி நேரமாவது தூங்க வேண்டியுள்ளது. எனவே தான் மாநாடு முடியும் முன்பே புறப்படுகிறேன் என்றார்.

பின்னர், அவரது தனி விமானம் பிரிஸ்பேன் நகரில் இருந்து விளாடிவோல்ஸ்டாக் நோக்கி புறப்பட்டது.

Sunday, 9 November 2014

மத்திய மந்திரிசபை விரிவாக்கம்: 21 புதிய மந்திரிகள் பதவி ஏற்ற்னர்

புதுடெல்லி, நவ. 9–

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் கடந்த மே மாதம் பா.ஜனதா அரசு பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக இன்று மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது.

மத்திய மந்திரி சபையில் ஏற்கனவே 45 பேர் மந்திரிகளாக உள்ளனர். இதில் 23 பேர் கேபினட் மந்திரிகள், 22 பேர் ராஜாங்க மந்திரிகள். இவர்களில் 10 பேர் தனிப் பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகளாக உள்ளனர்.

இன்றைய விரிவாக்கத்தில் மேலும் 21 பேர் புதிய மந்திரிகளாக நியமிக்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் கேபினட் அந்தஸ்த்துடன் கூடிய மந்திரிகள், 3 பேர் தனிப் பொறுப்புடன் கூடிய இணை மந்திரிகள் மற்றும் 13 பேர் இணை மந்திரிகள் ஆவார்கள்.

மந்திரி சபை விரிவாக்கத்தில் சிவசேனாவுக்கு மேலும் மந்திரி பதவி அளிக்க மோடி முடிவு செய்தார். ஆனால் மராட்டிய மந்திரி சபையில் தங்களுக்கும் இடம் கேட்டு சிவசேனா நெருக்கடி கொடுத்தது.

இதனால் சிவசேனா மந்திரி பதவி ஏற்பாரா என்ற கேள்வி எழுந்தது. கடைசி நேரத்தில் சிவசேனா இடம் பெற சம்மதித்தது. சிவசேனாவை சேர்ந்த சுரேஷ் பிரபு, அனில் தேசாய் ஆகியோர் மந்திரி பதவி ஏற்பார்கள் என்று உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

21 புதிய மந்திரிகளின் பதவி ஏற்பு விழா பகல் 1.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் தர்பார் ஹாலில் நடந்தது. புதிய மந்திரிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.

மனோகர் பாரிக்கர், சுரேஷ் பிரபு, ஜெ.பி.நத்தா, பிரேந்திர சிங் ஆகியோர் இன்று கேபினட் அந்தஸ்த்துடன் கூடிய புதிய  மந்திரிகளாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

கோவா முதல்–மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர். மத்திய மந்திரியாக பதவி ஏற்பதற்காக நேற்று அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். உ.பி. மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்–சபை எம்.பி.யாக இவர் விரைவில் தேர்ந்து எடுக்கப்படவுள்ளார். இதற்காக நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

பண்டாரு தத்தாத்ரேயா, ராஜிவ் பிரதாப் ருடி மற்றும் மகேஷ் சர்மா ஆகியோர் தனிப் பொறுப்புடன் கூடிய இணை மந்திரிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.

முக்தார் அப்பாஸ் நக்வி, ராம் கிரிபால் யாதவ், ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி, சன்வர்லால் ஜாட், மோகன்பாய் கல்யான்ஜிபாய் குண்டாரியா, கிரிராஜ் சிங், ஹன்ஸ்ராஜ் ஆஹிர், ராம் சங்கர் கத்தேரியா, ஒய்.எஸ்.சவுத்ரி, ஜெயந்த சின்ஹா, ராஜ்வர்த்தன் சின் ரத்தோர், பாபுல் சுப்ரியோ, சத்வி நிரஞ்சன் ஜோதி, விஜய் சம்ப்லா ஆகியோர் இணை மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

புதிய மந்திரிகளில், ஆந்திரா, மராட்டியம், பீகார், மேற்கு வங்காளம், கோவா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் அரியானா ஆகிய மாநிலங் களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய மந்திரியாக பதவி ஏற்ற ராம் கிரிபால் யாதவ், லல்லு கட்சியில் இருந்து விலகி பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு லல்லு மகள் மிசா பாரதியை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி மந்திரி சபையில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த நஜ்மா ஹெப்துல்லா மட்டுமே மந்திரியாக இருந்தார். தற்போது முக்தர் அப்பாஸ் நக்வியுடன் சேர்த்து முஸ்லிம்களுக்கு 2 பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மந்திரியாக நியமிக்கப்பட்ட பாபுல் சுப்ரியோ மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பின்னணி பாடகர் ஆவார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக அசன்சால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மத்திய மந்திரி சபையில் இதுவரை மேற்கு வங்காளத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது தற்போது பாபுல் சுப்ரியோ இடம் பெற்றுள்ளார்.

பண்டாரு தத்தாத்ரேயா, ஒய்.எஸ்.சவுத்திரி ஆகியோர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள்.

மற்றொரு மந்திரியான ராஜ்யவர்த்தன் ரதோர் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர். இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திரமோடியை இன்று காலை புதிய மந்திரிகள் சந்தித்தனர். அவர்களுக்கு மோடி தேநீர் விருந்து அளித்தார்.

அதன்பிறகு மோடியுடன் புதிய மந்திரிகள் அனைவரும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

கடைசி நேர மாற்றத்தால் இன்று புதிய பதவியேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த சிவசேனா எம்.பி.யான அனில் தேசாய் பதவியேற்றுக் கொள்ளவில்லை என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்று புதிய மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டவர்களில் யார்,யாருக்கு என்ன இலாகா? என்பது தொடர்பான அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Tuesday, 4 November 2014

கோர்ட் அறைக்குள் செல்போன் பேசியவருக்கு அபராதம்

புவனேஸ்வர், நவ.4-

கோர்ட் அறைக்குள் விசாரணை நடைபெற்றபோது செல்போனில் பேசியவருக்கு ஒடிசா நீதிபதி அபராதம் விதித்துள்ளார்.

ஒடிசா மாநிலம், கேண்ட்ரபரா மாவட்டம், மதுப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், நிலம்பர் மாலிக். நேற்று, கேண்ட்ரபரா மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு வந்த இவர், தலைமை மாஜிஸ்திரேட் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திக் கொண்டிருந்த அறைக்குள் சென்றார்.

விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தனது சட்டைப் பையில் இருந்து சாவகாசமாக செல்போனை எடுத்த அவர், யாருக்கோ போன் செய்து, மிக சுவாரஸ்யமாக கதையளக்கத் தொடங்கினார்.

இதைக் கண்டு எரிச்சல் அடைந்த மாஜிஸ்திரேட், கோர்ட்டின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்த குற்றத்துக்காக நிலம்பர் மாலிக்குக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அபராதத் தொகை கட்டிய பின்னரே கோர்ட் அறையில் இருந்து வெளியே செல்ல அவர் அனுமதிக்கப்பட்டார்.


Monday, 3 November 2014

உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து 4 சிறுவர்கள் பலி

லக்னோ, நவ.3-

உத்தரப்பிரதேசம் மாநிலம், சிதாபூர் மாவட்டம், ஜின்னாபூர்வா தங்கான் பகுதியில் தொழிற்சாலைகளுக்கு கனரக மின்சாரத்தை கடத்தும் கம்பி வழித்தடங்கள் அதிகம் உள்ளன.

நேற்றிரவு, இந்த வழித்தடக் கம்பிகளில் ஒன்று அறுந்து விழுந்ததில் உயரழுத்த மின்சாரம் பாய்ந்து சுமார் 17 வயது மதிக்கத்தக்க பர்வேஷ், சுனீல், தேஷ்ராஜ் மற்றும் கோபி என்ற பத்து வயது சிறுவனும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மின்கம்பி விழுந்து உடல் கருகிய ராமு என்ற சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த விபத்து பற்றி உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.